மோடியின் KGF..!
மோடியின் KGF..! நாம் ஏதாவது பெரிய ரிஸ்க் எடுத்தோம் என்றால் நமக்கு ஆலோசனை சொல்லுபவர்கள், இது நடக்காவிட்டால், நீ ஃப்ளாட் பார்முக்கு சென்றுவிடுவாய் என்று சொல்வார்கள் . அப்படி பிளாட்பார்மில் டீ விற்பதில் வாழ்க்கையை ஆரம்பித்து, பார் போற்றும் அளவிற்கு உயர்ந்தவர் தான், நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்கின்ற நரேந்திர மோடி. KGF திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ சொல்லுவார்," யாரோ 10 பேர அடிச்சி டான் ஆனவன் இல்லடா நா.. நா அடிச்ச 10 பேருமே டான்தான்" என்ற வசனம் வரும், அதுபோல யாரோ சிலரை எதிர்க்கொண்டு அரசியலில் மேல் வந்தவர் அல்ல நரேந்திர மோடி... அவர் எதிர்த்த கொண்ட ஒவ்வொருவரும் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகள் தான். அந்த வரிசையில் முதல் ஆளுமை யார் என்று பார்த்தால், இரும்பு மங்கை என்று அழைக்ககூடிய இந்திரா காந்தி. 1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை அறிவித்தார். KGF படத்தில் கருடன் தன்னுடைய இடத்தில் எப்படி சர்வவல்லமை பொருந்தியவராக இருப்பரோ, அப்படி அவசரநிலையை அறிவித்தபோது, இந்திரா இந்தியாவின் கருடனாக இருந்தார் . அவசரநிலை அறிவிப்பை அடுத்து, சோஷலிஸ்டுக...